×

10 இ-பைக்குகள் எரிந்து நாசம்

சென்னை: வானகரம் முஸ்தபா தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரிக் பைக் பழுதுபார்ப்பு மற்றும் சோலார் பேனல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு, நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டு, கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து கோயம்பேடு, பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த சோலார் பேனல் உற்பத்தி பொருட்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட இ-பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

Tags : E-bike, burnt out
× RELATED கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம்...