×

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் ஃபோர்டு தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க வேண்டும் - சிஐடியு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் ஃபோர்டு தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. ஃபோர்டு ஆலையை மூடினால் நேரடி ஊழியர்கள் 7000 பேரும் மறைமுக தொழிலாளர்கள் 30,000 பேரும் வேலை இழப்பர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் ஃபோர்டு கார் நிறுவனம் ஏப்ரலில் இருந்து உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஃபோர்டு கார் நிறுவன ஆலை செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Ford ,Sengalupu district ,CITU , ford
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்