×

மாடியிலிருந்து விழுந்தவரால் தொழிலாளி பலி

சென்னை: திருவேற்காடு அடுத்த சுந்தர சோழபுரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபுலால் நகாக் (24) என்பவர் கீழே நின்று கொண்டிருந்தார். அப்போது,  இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த பக்டார் பெகரா (26) என்பவர் நிலைதடுமாறி தவறி மேலே இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது, கீழே நின்று கொண்டிருந்த பாபுலால் நகாக்கிற்கு இடுப்பில் எலும்பு உடைந்து பலத்த காயமடைந்தார். அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.  திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Worker killed by falling from floor
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...