சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சியுடன் செயல்பட சட்டம் இயற்றப்படும். மேலும் மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகளை பாதுகாப்பதை நல ஆணையம் உறுதி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.