×

கோவையில் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த பெண் யார்?..போதிய வாகனம் எது?..குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்..!!

கோவை: கோவை சின்னியம்பாளையத்தில் சாலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண் யார்? போதிய வாகனம் எது? என்பது குறித்து போலீஸ் தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கோவை அவிநாசி சாலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க இந்த பெண் இனோவா காரில் மோதி இழுத்து செல்லப்பட்டு அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்த காட்சி பதிவாகியிருக்கிறது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் மட்டுமில்லாது, இறந்த பெண் யார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இறந்த பெண் தொடர்பாக இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இதனிடையே பிரேத பரிசோதனையில் அவர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் குழப்பம் அடைந்துள்ள போலீசார், அந்த பெண்ணை இழுத்து சென்ற இனோவா காரின் ஓட்டுனரை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால் அந்த வாகனத்தின் எண் சி.சி.டி.வி.யில் சரியாக பதிவாகாததால் சிக்கல் நிலவுகிறது. இதனிடையே போலீசார் நடத்திய ஆய்வில் அந்த வாகனம் திருவள்ளூரை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து ஒரு படை திருவள்ளூருக்கும், மற்றொரு படை விபத்து நிகழ்ந்த நேரத்தில் கடந்து சென்ற வாகனங்களை கண்டுபிடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : Coime , Coimbatore, woman, criminal, private police
× RELATED விபத்தில் உயிரிழந்த 50 வயதான பெண்,...