கோவை: விபத்தில் உயிரிழந்த 50 வயதான பெண், கோவையில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர் என்றும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கோவையில் கடந்த 6ம் தேதி காரில் இருந்து பெண் சடலம் வீசப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெண் கார் மோதி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது; விபத்துக்கு காரணமான காளப்பட்டியை சேர்ந்த ஃபைசல் கைது செய்யப்பட்டுள்ளார்.