×

காதல் ஜோடி தற்கொலை

திசையன்விளை: முறை தவறிய திருமணத்தில் ஏற்பட்ட தகராறில் காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த காதலனும் விஷம் குடித்து உயிரை மாய்த்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 7 பிள்ளைகளும், 2வது மனைவிக்கு 5 பிள்ளைகளும் உள்ளனர். 2வது மனைவியின் மகன் பிரபாகரன் (24). கட்டிடத் தொழிலாளி. இவர் தூத்துக்குடியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவரது மகளுடன் (18) பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரபாகரன், அவளை திசையன்விளைக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட எருமைகுளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இந்நிலையில் பிரபாகரன் ஒழுங்காக வேலைக்கு செல்லாததால் அவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அந்த பெண், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பிரபாகரன், மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெளியே சென்று குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தார். இதுகுறித்து அண்ணனுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து தேடியபோது எருமைகுளம் அருகே டாஸ்மாக் கடை பக்கத்தில் பிரபாகரன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

The post காதல் ஜோடி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vekteryanvilai ,Selvaraj ,Uvari ,Vektianvilai ,Nellai district ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...