சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியின் போது இறந்த உதவி ஆய்வாளர் உடலுக்கு டி.ஜி.பி. நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த எஸ்.ஐ. கோபிநாத் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருந்தார். சென்னை புளியந்தோப்பு குடியிருப்பில் உதவி ஆய்வாளர் கோபிநாத் உடலுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார்.