×

தமிழில் அர்ச்சனைக்கு தடை விதிக்க முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: தமிழகத்தில்  இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தமிழில்  அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இதை  எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு  வந்தது. அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், 1998ம் ஆண்டு உயர்  நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய  வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம  விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட  முடியாது எனவும் வாதிட்டார்.  இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2008ம் ஆண்டு  உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது  பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழில்  அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்றும் அந்த தீர்ப்பில்  கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று  நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்ய  தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Archana ,iCourt , Archana, ban, petition, in Tamil, high court
× RELATED சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாஜவில் தஞ்சம்