சென்னை: திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி உறுப்பினராக கருதக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்ட மன்ற உறுப்பினர்களை எங்கு எப்படி அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.