×

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பாறையை இணைக்க ரூ.37 கோடியில் கடல் சார் நடைபாலம்

சென்னை:சட்டபேரவையில் நேற்று நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் கூறயிருப்பதாவது: கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறையையும், திருவள்ளுவர் சிலை பாறையையும் இணைக்கும் ஏறத்தாழ 140 மீட்டர் நீளம் கொண்ட கடல் சார்பாலம் ரூ.37 கோடி செலவில் அமைக்க 50 சதவீதம் ஒன்றிய அரசின் நிதியுதவியுடனும், 50 சதவீதம் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்தும் சாகர்மாலா, உள்நாட்டு சரக்கு தோணித்துறை திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Tags : Vivekananda ,Thiruvalluvar , Vivekananda rock, Thiruvalluvar statue, sea walkway
× RELATED ஓடும் படகில் சுற்றுலா பயணி பலி