×

ஓடும் படகில் சுற்றுலா பயணி பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் படகில் பயணித்து கடல்நடுவே அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கேரள மாநிலம் காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்த சிலர் குழுவாக கன்னியாகுமரிக்கு நேற்று காலை சுற்றுலா வந்தனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த அசோகன் (59) என்பவரும் வந்து இருந்தார். இதையடுத்து அந்த குழுவினர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகில் ஏறினர். பயணிகள் ஏறியதும் படகு புறப்பட்டு கடலில் சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அசோகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நெஞ்சை பிடித்துக்கொண்டு கதறியவாறு சுருண்டு விழுந்தார். இதைக்கண்டு படகில் பயணித்த சக சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அசோகனுக்கு படகில் வைத்தே முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் அசோகன் அங்கேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

The post ஓடும் படகில் சுற்றுலா பயணி பலி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Vivekananda Mandapam ,Poombukar Shipping Corporation ,Kanchirangode, Kerala ,Dinakaran ,
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...