×

சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி: அகில இந்திய வானொலி ஒலிபரப்பு

சென்னை : சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு, வரும் ஓராண்டு காலத்திற்கு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்திச் சித்திரம் ஒன்றை ஒலிபரப்புகிறது. விடுதலைப் போராட்ட நாயகர்கள் என்ற தலைப்பில், தலா 10 நிமிடங்களுக்கு ஒலிபரப்பாகும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை மணி 6.45 செய்திக்கதம்பம் நிகழ்ச்சியில் சென்னை அலைவரிசை ஒன்றில் இது ஒலிபரப்பாகிறது. இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்.

அதன் மறுஒலிபரப்பு, அதே நாள் மாலை மணி 7.45க்கு எப்எம் கோல்டு அலைவரிசையில் ஒலிபரப்பாகும். எப்எம் ரெயின்போ பண்பலையில் இதே நிகழ்ச்சி காலை 9 மணி செய்திச் சுருக்கத்தை தொடர்ந்து இடம்பெறும். தமிழ்நாட்டை சேர்ந்த தியாகிகள் இதில் முக்கியத்துவம் பெறுவார்கள். இந்த நிகழ்ச்சியை செய்தி சித்திரமாக மாநில செய்திப் பிரிவு வடிவமைக்கிறது.

Tags : Freedom Fighter, All India Radio
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...