சென்னை: மம்முட்டி, துல்கர் சல்மான் வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு சொந்தமான நிலத்தை புறம்போக்கு நிலமாக அறிவித்த ஆணையர் உத்தரவை எதிர்த்து மம்முட்டி, துல்கர் வழக்கு தொடர்ந்தனர். செங்கல்பட்டு அருகே கருங்குழிபள்ளத்தில் மம்முட்டிக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டுள்ளார்.