ஆரணி: ஆரணி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல் செய்த முன்னாள் மேற்பாா்வையாளர் அறிவழகன் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். வடுகசாத்து கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக அறிவழகன் பணிபுரிந்தார்.