×

3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்

 

நாகர்கோவில், ஏப்.21: மூன்று நாட்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். மக்களவைத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு மதுபான சப்ளையை தடை செய்யும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. கடந்த 16ம் தேதி இரவு மூடப்பட்ட மது கடைகள் அதன் பிறகு திறக்கப்படவில்லை .

பிரசாரம், வாக்குப்பதிவு முடிந்து நேற்று பகல் 12 மணிக்கு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 16ம் தேதி மட்டும் சுமார் ரூ..6.24 கோடி ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் மதுபான கடைகளில் நிரம்பி வழிந்தனர்.

The post 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள் appeared first on Dinakaran.

Tags : Tasmac Bars ,Nagercoil ,Tasmac ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...