×

தொண்டர்கள் சந்திக்க வரவேண்டாம்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு, 2006ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்த நாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடித்து வருகிறோம். இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம். தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்தநிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம். கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Vijayakant , Vijayakant, request
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை