சென்னை: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. தற்போது, ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வரை ஆறுமாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.