சென்னை: சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷில்ஹரி பள்ளியில் 2011,12,13ல் படித்த மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 2வது குற்றப்பத்திரிகை தயாராகிவிட்டதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.