×

'உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடக்கூடாது'!: வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேட்டி..!!

சென்னை: உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று 59வது பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை அசோக்நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய திருமவளவன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை பிளவுபடுத்தும் நோக்குடன் பாஜக சங் பரிவர் அமைப்புகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை என்றும் உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடக் கூடாது என்றும் ஆப்கான் ஆட்சி மாற்றத்தை அரசியல் ரீதியாக பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். அனைத்து குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், பெரியார் நினைவிடத்திலும் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.


Tags : V. D.C. , Religious fundamentalism, rule, Thirumavalavan
× RELATED 'தமிழகம், புதுச்சேரியை காவு வாங்க...