×

சேதுபாவாசத்திரம் அருகே விவசாயி வீட்டில் தீ நகை, பணம் எரிந்து சாம்பல்

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் விவசாயி வீட்டில் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது. இதில் ரூ.2லட்சம், பொருட்கள் எரிந்து சாம்பலானது.சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஆண்டிக்காடு ஊராட்சி, எட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மகன் சுப்பிரமணியன்(45) விவசாயி.. சுப்பிரமணியன் மற்றும் இவரது மனைவி லதா ஆகியோர் விவசாய வேலைக்காக வெளியில் சென்று விட்டனர். சுப்பிரமணியனின் தாயார் பாக்கியம்(67), மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீடு தீப்பற்றி எரிந்தது.

அக்கம்பக்கத்தினர் பார்த்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர்.ஆனால் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் செல்வராஜ் மற்றும் வீரர்களுடன் தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது,மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இத்தீவிபத்தில், 6 பவுன் நகை, ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. .பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஷ்வரன் உத்தரவின் பேரில் வி.ஏ.ஒ முருகேசன்(பொ) நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sethupavasathiram , Fire at a farmer's house near Sethupavasathiram Jewelry, money burned to ashes
× RELATED சேதுபாவாசத்திரம் ஒன்றியம்...