×

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நாடியம்-வேளாகுடி இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்

பேராவூரணி,ஏப்.26: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நாடியம்-வேளாகுடி இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடியம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி வழியாக வேளாகுடி இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலையை இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் விவசாய பணிகளுக்கான பொருட்கள் கொண்டு செல்லவும், அறுவடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவரவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை செல்வதற்கு குறுக்கு வழியாகவும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை பல வருடங்களாக பராமரிப்பு செய்யப்படாமலும், செப்பனிடப்படாமல் பழுதடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு வசதியற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலை வழியாக விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sethupavasathiram Union ,Nadiam ,Velakudi ,
× RELATED திருவாரூர் அருகே இளைஞர் வீலிங்...