×

அல்லாவின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம், இது போன்ற வெற்றி உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை : தாலிபான்கள் துணை தலைவர் பேட்டி

காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் விரும்பும் வண்ணம் புதிய ஆட்சியை தரப்போவதாக தாலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.ரகசியமான இடத்தில் இருந்து சர்வதேச ஊடகங்களுக்கு வீடியோ மூலமாக பேட்டி அளித்துள்ள தாலிபான் இயக்கத்தின் துணைத் தலைவர் முல்லா பரதார் இதனை தெரிவித்து இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து இருக்கும் தாலிபான்களுக்கு இது தான் சோதனை காலம் என்று குறிப்பிட்டு இருக்கும் முல்லா பரதார் , நாடு முழுவதும் அமைதியும் சிறப்பான சேவையும் தாலிபான் இயக்கம் அளிக்கும் என்று உறுதிப்பட கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆப்கன் தேசத்திற்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.குறிப்பாக காபூல் மக்கள் மற்றும் முஜாஹிதீன்களுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் கடந்த வழி, எதிர்பார்க்காதது. நாங்கள் வந்து அடைந்துள்ள இடம், நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்காதது.ஆனால் நாங்கள் அல்லாவின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம், இது போன்ற வெற்றி உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை. எனவே நாங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம்,என்றார்.

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் வீழ்ந்ததை தொடர்ந்து அங்கு போர் முடிவுக்கு வந்து விட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு நாட்டோ படைகள் வெளியேறியதும் சுமார் 10 நாட்களுக்கு முன்பு முழு வீச்சில் தாக்குதலை தொடங்கிய தாலிபான்கள், எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் மிக குறுகிய காலத்திலேயே முழு நாட்டையும் கைப்பற்றியுள்ளனர். அதிபர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிபர் அஷ்ரப் கனி தமக்கு நெருக்கமானவர்களுக்கு அண்டை நாடான உஸ்பேகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் தாலிபான்கள் காபூலுக்கு சென்றுவிட்டனர். 


Tags : Allah ,Taliban ,Vice President , ஆப்கானிஸ்தான்
× RELATED குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்...