டெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் ஒட்டுமொத்த அமைச்சகங்களின் சார்பில் பதிலளிக்க வேண்டிய பிரதமர் மோடி மௌனம் ஏன் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கேரள எம்.பி ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது என்றும் பெகாசஸ் செயலியை வழங்கும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்புத்துறை பதில் அளித்தாலும், ஒட்டுமொத்த அமைச்சகங்கள் சார்பில் ஒன்றிய அரசு பதில் கூற மறுப்பது ஏன்? பெகாசஸ் விவகாரத்தால் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 16 நாட்களாக முடங்கியுள்ள நிலையில் இன்று கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.