×

கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில் சட்டம்; தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்: காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி

டெல்லி: தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டை பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை அமல்படுத்தப்படும். பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும். பா.ஜ.க.வுக்கு மாறியதால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். தேர்தல் பத்திர முறைகேடு, பி.எம். கேர்ஸ், ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருக்கிறது.

The post கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில் சட்டம்; தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்: காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Congress party ,Delhi ,Rafale ,Pegasus ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...