×

அசாமில் 2 நாளில் 46 தீவிரவாதி சரண்

கவுகாத்தி: அசாமில் போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, ‘என்எல்எப்பி’ என்ற தீவிரவாத அமைப்பு போராடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாக, இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் அரசிடம் சரணடைந்து வருகின்றனர். புதிதாக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் தீவிரவாதிகளில் 32 பேர் நேற்று முன்தினம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். தொடர்ந்து, நேற்றும் 14 பேர் சரண் அடைந்தனர். இவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.   என்எல்எப்பி இயக்கத்தின் தலைவன் பாதா, கடந்த ஜூலை இறுதியில் 22 தீவிரவாதிகளுடன் சரணடைந்தான். அந்த இயக்கத்தில் மீதமுள்ளவர்களும் விரைவில் சரண் அடைவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Assam , Assam, militant, Charan
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...