சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியிலுள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த தரணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மூக்கில் ரத்தம் கசிந்து உடல் நீல நிறமாக மாறி இறந்ததாக புகார் எழுந்துள்ளது. தகவலறிந்த வந்த சாஸ்திரி நகர் போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.