கூடுவாஞ்சேரி: சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு அரசு பஸ், நேற்று மாலை புறப்பட்டது. அதில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பஸ் சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி, காரணைப்புதுச்சேரி கூட்ரோட்டில் வேகமாக திரும்பியபோது, பின்பக்க டயர் வெடித்தது. இதனால், சாலையில் சிதறி கிடந்த கற்கள் பறந்து, அரசு பஸ் கண்ணாடிமீது விழுந்தன. இதில், கண்ணாடிகள் உடைந்து நொறுக்கின. சத்தம் கேட்டு பஸ்சில் இருந்த பயணிகளும், பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். இதை கண்ட டிரைவர், லாரியை நிறுத்தாமல், தப்பிவிட்டார்.