×

கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் ரூ.12 கோடி மீட்பு..!!

கோவை: கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் ரூ.12 கோடி, 140 சவரன் நகை, ரூ.100 கோடி ஆவணங்கள் மீட்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகம் நடத்தி வருகிறார். தொழிலதிபர் சிவராஜ் அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர், ரூ.200 கோடி சொத்துகளுக்கு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து ரூ.100 கோடி பணத்தையும் மோசடி செய்துள்ளனர். மோசடி நடைபெற்றதை கண்டறிந்த சிவராஜ் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சிவராஜ் புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 பேரை காவலில் எடுத்து விசாரித்த கோவை போலீசார் , ரூ.12 கோடி, 140 பவுன் நகை, ரூ.100 கோடி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

The post கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் ரூ.12 கோடி மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sivaraj ,Beelamedu ,Shivraj ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...