திண்டுக்கல்: தரமில்லாத நிலையில் உள்ள பழனி - கொடைக்கானல் சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் இருந்து மூணாறு செல்லும் சாலையை தரம் உயர்த்த கேரள அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். பாலம் அமைப்பதில் கடந்த 10 ஆண்டுகளாக நெல்லை, திருச்சி, மதுரை மாவட்டங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன.