×

ஆந்திர எல்லையில் மீன் பிடித்த காசிமேடு மீனவர்கள் 11 பேர் மாயம்

சென்னை:  சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பெருமான் (20). இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 7ம் தேதி காசிமேடு பகுதியை சேர்ந்த சோமேஷ் (35) என்பவர் தலைமையில், மீனவர்கள் ஜெகன் (30), நீலகண்டன் (28), சூர்யநாராயணன் (30), காமேஷ் (40), ராஜுவ் (26), சிவாஜி (28), பாவையா (55), ரவி (26), அப்பாராவ் (50) மற்றும் பாபு (35) ஆகிய 11 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 16ம் தேதி, ஆந்திர மாநிலம் ராமையாபட்டினம் பகுதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது விசை படகு பழுதடைந்துவிட்டதாக வயர்லெஸ் மூலம் சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீனவர்களை தொடர்பு கொண்டபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.   

இதுபற்றி அறிந்த மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆந்திர மாநில கடல் பகுதியில் மாயமான மீனவர்களை ஹெலிகாப்டர், ரோந்து படகு மூலமும் கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : Andhra Pradesh , AP frontier, fishermen, magic
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...