×

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் கமல் கலந்துரையாடல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை காணொலி காட்சி மூலம் தொடர்புகொண்டு, வாழ்த்து்் தெரிவித்தார். தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் கமல்ஹாசன் நேற்றுமுன்தினம் கலந்துரையாடினார். “வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான உலக நாயகர்கள், இந்தியாவின் தங்கச்சுரங்கம் நீங்கள், வெறும் தங்க பதக்கம் அல்ல. நீங்கள் கற்றவையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள சுய மரியாதையை போலவே, உங்கள் விளையாட்டையும் மரியாதையுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியுடன் திரும்பும்போது உங்களை பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார். கமலுக்கு வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Kamal ,Tamil Nadu ,Olympics , Kamal discusses with Tamil Nadu athletes participating in the Olympics
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...