சென்னை: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கடைகளை 15ம் தேதிக்கு மேல் அகற்ற நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஜூலை 15ம் தேதிக்கு மேல் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.