சென்னை: ஓ.டி.டி. தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் என்.சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நஷ்டத்தில் இயங்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.