அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கடம்பூர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மாரிமுத்து, இவர் அரசு உழவர் பாதுகாப்புத் திட்ட நிவாரணம் பெற விண்ணப்பித்தவரிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.