×

மதுரையில் இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் 2 குழந்தைகளை விலைக்கு வாங்கிய 5 பேர் கைது..!!

மதுரை: மதுரையில் இதயம் அறக்கட்டளையின் காப்பகம் மூலம் இரு குழந்தைகளை விலைக்கு வாங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காப்பகத்தில் இருந்த குழந்தை கொரோனாவால் இறந்ததாக கூறிய நிலையில் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையை விலைக்கு வாங்கிய நகைக்கடை அதிபர் கண்ணன், அவரது மனைவி பவானி கைது செய்யப்பட்டனர். மற்றொரு குழந்தையை விலைக்கு வாங்கிய எவர்சில்வர் பட்டறை தொழிலாளி சாதிக், மனைவி ராணி கைது செய்யப்பட்டனர். மேலும் இரு குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக இதயம் அறக்கட்டளை நிர்வாகி கலைவாணியும் கைது செய்யப்பட்டார்.

Tags : Maduro , Madurai, Heart Foundation Archive, Child, Arrested
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...