×

பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் பலி இன்று மட்டும் சென்னையில் படப்பிடிப்பு நடக்காது

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் கேயார், மனோஜ் குமார், ஆர்.கே.செல்வமணி உள்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றியவர், அங்கமுத்து சண்முகம் (வயது 58). இவர், மறைந்த கலை இயக்குனர் அங்கமுத்துவின் மகன். கலை இயக்குனர்கள் சங்க தலைவராகவும், பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன செயலாளராகவும் 3 முறை தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அங்கமுத்து சண்முகம், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

அவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இன்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் அங்கமுத்து சண்முகம் இறுதிச்சடங்கு நடப்பதால், இன்று மட்டும் சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்று, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Pepsi ,Angamuthu Shanmugam , Pepsi executive Angamuthu Shanmugam killed
× RELATED விஜயகாந்த் மறைவுக்கு தென்னிந்திய...