×

கொரோனா பாதிப்பு குறித்து வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ளும் கருவி: ஐசிஎம்ஆர் ஒப்புதல்

புதுடெல்லி:  கொரோனா பாதிப்பு குறித்து வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் (ஆர்ஏடி) கருவிக்கு இந்தி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமானதைத் தொடர்ந்து, பாதிப்புகள் குறைவாக உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,  வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் கருவிக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தக் கருவி மூலம் 15 நிமிடங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து, முடிவை தெரிந்துகொள்ளலாம். இதன் விலை ரூ.250. புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தக் கருவியைத்  தயாரித்துள்ளது. இது, கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருப்பவர்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்தக் கருவியை பயன்படுத்தி செய்யும் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்றால் பாதிப்பு இருப்பது உறுதியென்றும், ஒருவேளை நெகடிவ் என்றால் உடனே அவர்கள் ஆர்.டி-பி.சி.ஆர்  சோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும்  ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மேலும் அது, சோதனை முடிவுகள் தங்களது சர்வரில் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கருவி மூலம் வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள, அதற்கான ஆப் ஒன்றை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆப்-ல் கூறியுள்ளபடி சோதனையை மேற்கொள்ள  வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு அதற்கான முடிவு ஆப்பிலேயே காட்டும். …

The post கொரோனா பாதிப்பு குறித்து வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ளும் கருவி: ஐசிஎம்ஆர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : ICMR ,New Delhi ,Hindi Medical ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி