×

திருவாரூர் மாவட்டம் கூடுரில் ஏடிஎம் கொள்ளை; தடுக்க முயன்றவர் கொலை: 20 வயதுக்கு கீழ் உள்ள 4 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூடுரில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்ற வணிக வளாக உரிமையாளர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஐ. இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதை தடுத்த தமிழரசுவை கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்துள்ளது. திருவாரூர் அருகே கூடூர் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இதனை வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர் கவனித்து உள்ளார். நள்ளிரவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அவர் ஓடி சென்று கொள்ளையர்களை தடுத்து உள்ளார்.  இதில் அவர்கள் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.  இந்த சம்பத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர் உயிரிழந்து உள்ளார். 


இதேபோன்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவம் பற்றி அறிந்து மதன் என்பவரை கைது செய்தனர்.  அவருடன் வந்த 3 பேர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்கள் ஊட்டியாணி பகுதியை சேர்ந்த பிரதாப், ஆகாஷ், விஜய் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  கைது செய்யப்பட்ட 4 பேரும் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் 4 பேர் மீதும் வேறு ஏதும் வழக்கு நிறுவையில் உள்ளதா என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 



Tags : Koodur, Thiruvarur district , Thiruvarur, ATM, robbery, 4 arrested
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...