×

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


குறிப்பாக பாலியல் பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான ஆதாரங்களை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தீவிரமாக திரட்டி வந்தார்கள். குறிப்பாக சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவரையும் விசாரணைக்கு உட்படுத்தி அது தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியிலும் தீவிரம் காட்டி வந்தனர். 


இதற்கிடையே முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முன்ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.  உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 


அவரது செல்போன் சிக்னல்-ஐ வைத்து தேடுதல் வேட்டை நடைபெற்ற போது மணிகண்டன் அதனை தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாகவும், அவரது உதவியாளர் மூலமாகவே செல்போன் கொண்டு பலரையும் தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரியவந்திருக்கிறது. தற்போது மணிகண்டனை பிடிக்க மதுரைக்கு தனிப்படை போலீஸ் விரைந்துள்ளது. 



Tags : Minister ,Manikandan , AIADMK ex-minister Manikandan, personnel
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...