சென்னை: பத்திரப்பதிவு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் விரைவில கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடக்கும் முறைகேடு தொடர்பாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தரகர்கள் இல்லாமல் உரிய கட்டணம் பெற்று பத்திரப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.