×

கருவாடு கூட மீன் ஆகலாம் ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது: விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்மந்தமே இல்லை. அவர், ஜெயலலிதா வீட்டில் உதவியாளராக வந்தவர் அவ்வளவுதான்.  நான்தான் உண்மையான அதிமுக என்று சொல்லிய சசிகலா, டிடிவி தினகரன் இங்கே வழக்கு தொடர்ந்தார்கள். பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தனர். தேர்தல் ஆணையம் தீர்ப்பில், ஓபிஎஸ், இபிஎஸ்-ஆல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும், பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது செல்லும். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

உண்மையான அதிமுக இவர்கள் தலைமையில் இயங்குகிறது என்று தேர்தல் ஆணையம் தெளிவாக சொல்லிவிட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றம், மற்றும் அமர்வில் வழக்கு தொடர்ந்ததிலும், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்துவிட்டனர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கும்  இறுதியாக தள்ளுபடி ஆனாது. சசிகலா என்ன வேஷம், நாடகம் போட்டாலும் சரிதான். காளிமுத்து சொல்வார், கருவாடு மீனாகாது என்று. ஆனால், கருவாடு கூட மீன் ஆகலாம், சசிகலா அதிமுகவில் உறுப்பினராகக்கூட முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்கள் பலத்துடன் உள்ள இந்த இயக்கத்தை, ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றார்.

Tags : Even an embryo can become a fish.
× RELATED உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட தேர்தல்...