சென்னை: வடக்குவரை எதிரொலித்த ஆளுமை என்று கலைஞருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். அறிஞர் அண்ணாவின் கொள்கையான மாநிலத் தனித்துவத்தை வடக்கு வரை எதிரொலித்த ஆளுமை. தானின்றி தமிழ்நாட்டின் அரசியல் அசைவுகள் இல்லையென இறுதிவரை இருத்திக்காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவர்தம் பிறந்த நாளின் அவரது உறுதிகொண்ட நெஞ்சை நினைவுகூர்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.