சென்னை: முன்னாள் எம்.பி, டி.கே.ரங்கராஜன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகலூர் காகித ஆலை, சிமென்ட் ஆலைகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.