சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். 45 நிறுவனங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு ஆக்சிஜன், தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.