சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 120 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் குணமடைந்த நிலையில் 373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.