×

டவ் - தே புயல் சேதங்களுக்கு மத்தியில் மழையில் குத்தாட்டம் போட்ட நடிகை!: சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

மும்பை: மும்பையில் டவ் - தே புயல் சேதங்களுக்கு இடையே மழையில் குத்தாட்டம் போட்டு அந்த வீடியோ--வை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நடிகைக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. குஜராத்தில் கரையை கடந்த டவ் - தே புயல், மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை தீபிகா சிங், புயலில் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 


புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது.. அதுவாகவே கடந்து போகும் என்றும் நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று, டவ் - தே புயல் சேதம் என சோகத்தில் மூழ்கி இருக்கும் மும்பை வாசிகளை சின்னத்திரை நடிகை தீபிகா சிங்கின் செயற்பாடுகள் எரிச்சலடைய செய்துள்ளது. புயலில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் போது அதனை இப்படி ரசித்து நடனமாடுவதா? என்று தீபிகா சிங்கிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தீபிகா சிங்கின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 



Tags : Dove , Dove - The storm, the rain, the stabbing, the actress
× RELATED சீனாவுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகம் 8...