சென்னை: காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்ட மக்களால் கல்விக்கண் திறந்த வள்ளல் என்று துளசி அய்யா வாண்டையார் கொண்டாடப்பட்டவர். மேலும் சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார் மறைவு செய்தி அறிந்து ஆற்றொணா துயரம் கொண்டேன் என முதல்வர் கூறியுள்ளார்.