×

தகுதியான திறமையான பலர் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்: சென்னை ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைத்து பணப்பலன்களையும் பெறுகின்றனர். தகுதியான திறமையான பலர் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றுகின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளது. பணிநீக்கத்தை எதிர்த்த கடலூர் முன்னாள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

லஞ்சம் வாங்காதவர்களை, பிழைக்கத் தெரியாதவர்கள், வேலை தெரியாதவர்கள் என்கின்றனர். ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால் தான் சரியாக இருக்கும் உன உயர்நீதமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே கூறியிருந்தது. அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குவதில் தாமதம் செய்வது ஊழலை அதிகரிக்கவும், குற்றவாளிகளுக்கு ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்பு அளிக்கும் என கூறியுள்ளது.


Tags : Chennai , Qualified Talent.Low Wages. As staff .Icord
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...