×

புதிய உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு!: இந்தியாவிற்காக பிரார்த்திப்போம் என இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்..!!

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியாவுக்காக பிரார்த்தனைகள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா 2ம் அலையின் தாக்கம் இந்தியாவில் மிக தீவிரமாக இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் மரணமடைந்து வருகின்றனர். 


உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்‍கா முதலிடத்தில் உள்ள நிலையில், விரைவில் அமெரிக்‍காவை முந்தி, இந்தியா முதலிடத்திற்கு நகர்ந்துவிடும் என​ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை விபத்துகள், தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் இந்தியா மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பலரும் இந்தியாவுக்காக பிரார்த்திப்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்காக பிரார்த்திப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட 2 மணி நேரத்தில் சுமார் 31,000 பேர் அதனை லைக்‍ செய்துள்ளனர். 38 ஆயிரத்துக்கும் அதிமானோர் அந்த ட்வீட்டை ரீ - ட்வீட் செய்துள்ளனர்.



Tags : India ,R. Rakuman , India, Pray, Corona, A.R. Raghuman
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!